Search This Blog

Friday, November 30, 2012

ஜிமெயில் மூலம் 10ஜிபி அளவுள்ள பைல்கள் வரை அனுப்பலாம்


கூகுள் வழங்கும் ஜிமெயில் இமெயில் சேவையே உலகளவில் ஏராளமானோர் பயன்படுத்தி வருகின்றனர். இமெயில் அனுப்புவது மற்றும் பெறுவது மட்டும் அல்லாமல் இந்த இமெயிலில் இணைத்து பைல்களையும் அனுப்புவர் மற்றும் பெறுவர். ஆனால் இதுவரை ஜிமெயிலில் இமெயி்ல் அனுப்பும் போது 25எம்பி அளவு மட்டுமே 
பைல்களை அனுப்ப முடியும். அதனால் பெரிய அளவு கொண்ட பைல்களை ஜிமெயிலில் அனுப்ப முடியாது.

ஆனால் இனிமேல் ஜிமெயில் மூலம் 10ஜிபி அளவுள்ள பைல்கள் வரை அனுப்பலாம் என்று கூகுள் தற்போது அறிவித்திருக்கிறது. இந்த அறிவிப்பு ஜிமெயில் உறுப்பினர்களுக்கு கண்டிப்பாக இனிப்பான செய்தியாக இருக்கும் என்பதில் ஐயமில்லை.
இந்த புதிய வசதிக்காக ஜிமெயிலோடு கூகுள் ட்ரைவை இணைத்திருக்கிறது கூகுள். இதனால் ட்ரைவ் மூலம் நேரடியாக பைல்களை இணைத்து ஜிமெயில் மூலம் அனுப்ப முடியும். இதன் மூலம் 10ஜிபி வரை பைல்களை அனுப்ப முடியும். மேலும் இந்த 10ஜிபி என்பது பழைய 25 எம்பியைவிட 400 மடங்கு அதிகமாகும். மேலும் இந்த வசதியைப் பெற ஜிமெயில் உறுப்பினர்கள் ஜிமெயிலின் அப்டேட் வெர்சனைப் பயன்படுத்த வேண்டும்.
மேலும் பைல்களை அனுப்பும் போது ஜிமெயில் அவற்றை மீண்டும் ஒரு முறை பரிசோதனை செய்யும் என்று கூகுளின் தயாரிப்பு மேலாளர் பில் ஷார்ப் தெரிவித்திருக்கிறார்.
மெயிலை அனுப்புவதற்கு முன்பாக ஜிமெயிலில் உள்ள ட்ரைவ் ஐகனை க்ளிக் செய்து அதன் மூலம் பைல்களை இணைத்து அனுப்ப வேண்டும். இந்த வசதியை இன்னும் சில நாள்களில் கூகுள் களமிறக்க இருக்கிறது

Monday, November 26, 2012

Free Online Video Classes

ஆன்லைன் வீடியோ வகுப்பறைகள்


கல்லூரியில் நடத்தப்படும் பாடங்கள் உங்களுக்கு போர் அடிக்கிறதா? தொடர்ந்து அமர்ந்தவாறு அவற்றைக் கவனிக்க முடியவில்லையா? 

உங்களுக்காகவே ஆன்லைனில் அனைத்து பாடங்களுக்குமான வீடியோ வகுப்பறைகள், பாடக் குறிப்புகள், அனிமேஷன் வழி பாடங்கள், படித்ததைச் சோதனை செய்து கொள்ள ஆன்லைன் தேர்வுகள், ஆடியோ உரைகள் என அனைத்து வழிகளிலும் கற்றுக் கொள்வதை உற்சாகப்படுத்தும் இணைய தளம் ஒன்று இயங்குகிறது. 

அறிவியல் பாடங்கள் அனைத்தும் ஐ.ஐ.டி. போன்ற கல்வி நிலையங்களில் பாடம் நடத்தும் பேராசிரியர்களால் வீடியோ வகுப்பறைகளாகத் தரப்படுகின்றன. 

பிசிக்ஸ், கெமிஸ்ட்ரி, மேத்ஸ் அண்ட் ஸ்டேட்டிக்ஸ், பயாலஜி, மெடிசின், கம்ப்யூட்டர் சயின்ஸ், இஞ்சினியரிங், அக்கவுண்டிங் மற்றும் மேனேஜ்மெண்ட், பல் வைத்தியம், நர்சிங், சைக்காலஜி, ஹிஸ்டரி, மொழிப் பாடம் என ஏறத்தாழ அனைத்து பாடங்களும் இந்த தளத்தில் கிடைக்கின்றன. 

பிசிக்ஸ், கெமிஸ்ட்ரி மற்றும் பயாலஜி பாடங்களுக்கு அனிமேஷன் முறையிலும் பாடங்கள் கற்றுத் தரப்படுகின்றன. இதனால் வேடிக்கையாக இந்த பாடங்களை விளக்கங்களுடன் கற்றுக் கொள்ளலாம். 

இந்த பாடங்களுக்கும் மற்றும் மெடிகல், கம்ப்யூட்டர் சயின்ஸ் ஆகியவற்றிற்கும் பாடக் குறிப்புகள் கிடைக்கின்றன. 

மெடிகல் மாணவர்களுக்கு உயர் நிலை படிப்பு படிக்க எழுதும் நுழைவுத் தேர்வுகளுக்குப் பயிற்சியும் ஆன்லைன் தேர்வும் தரப்படுகிறது. 

யு.எஸ்.எம்.எல்.இ., எம்.ஆர்.சி.பி., முதுநிலை பாடப்படிப்புகளுக்கான நுழைவுத் தேர்வுகளுக்கு மாதிரி தேர்வுகள் ஆன்லைனில் நடத்தப்படுகின்றன.

அனைத்து மாணவர்களுக்கும் மிக மிக பயனுள்ள தளமாக இது உருவாக்கப்பட்டுள்ளது. வாழ்க்கையில் உயரத் திட்டமிடும் மாணவர்களுக்கு இது ஒரு அருமையான மேடை அமைத்துத் தந்து உதவிக் கரம் நீட்டுகிறது. 

இதன் முகவரி http://www.learnerstv.com/

Sunday, November 25, 2012

Free Gmail Sms


தொடர்ந்து ஏதேனும் ஒரு புதுமையான வசதியைத் தன் வாடிக்கையாளர்களுக்குத் தருவதை வழக்கமாகக் கொண்டிருக்கும் கூகுள், அண்மையில் ஜிமெயில் பயன்படுத்தும் வாடிக்கையாளர்கள், தங்கள் ஜிமெயில் நண்பர்களுக்கு எஸ்.எம்.எஸ். வழங்கும் வசதியைத் தந்துள்ளது. 



இந்தியா உட்பட 54 நாட்டில் உள்ளவர்களுக்கு, அவர்களின் மொபைல் போனுக்கு இதன் மூலம் எஸ்.எம்.எஸ். அனுப்பலாம். கூகுள் இதற்கான ஒப்பந்தங்களை ஒவ்வொரு நாட்டிலும் மொபைல் சேவை வழங்கும் பெரும்பாலான நிறுவனங்களுடன் மேற்கொண்டுள்ளது. 

இந்த சேவை பயன்படுத்த கட்டணம் இல்லை; முற்றிலும் இலவசமே. ஆனால், மொபைல் சேவை வழங்குபவர்கள், எஸ்.எம்.எஸ். பெறுவதற்கு கட்டணம் வசூலித்தால், எஸ்.எம்.எஸ். பெறுபவர் அதனை மொபைல் சேவை நிறுவனத்திற்குச் செலுத்த வேண்டியதிருக்கும். 

இந்த சேவையை எப்படி பயன்படுத்துவது எனப் பார்க்கலாம். முதலில் ஜிமெயிலில் உள்ள நீங்கள் தொடர்பு கொள்ளும் நண்பரின் மொபைல் எண்ணை ஜிமெயில் தளத்தில் பதிவு செய்து கொள்ள வேண்டும். நீங்கள் அனுப்பும் எஸ்.எம்.எஸ். செய்திக்கு, உங்கள் நண்பர் பதில் அனுப்பினால், அது ஜிமெயில் உரையாடல் (chat) பகுதியில் செய்தியாகக் கிடைக்கும். 

உங்கள் மொபைல் போனுக்குக் கிடைக்காது. மேலும் நீங்கள் எஸ்.எம்.எஸ். அனுப்ப முயற்சிக்கும் நேரத்தில், உங்கள் நண்பர் ஜிமெயிலைப் பயன்படுத்திக் கொண்டிருந்தால், உரையாடல் வசதியைப் பயன்படுத்தும்படி ஜிமெயில் அறிவுறுத்தும். 

இருப்பினும் நீங்கள் அனுப்பும் எஸ்.எம்.எஸ். அனுப்பப்படும். ஒவ்வொரு ஜிமெயில் பயனாளருக்கும், ஒவ்வொரு நாளும் 50 எஸ்.எம்.எஸ். அனுப்பும் வசதி தரப்படும். அனுப்பும் ஒவ்வொரு எஸ்.எம்.எஸ்.க்கும் ஒன்று கணக்கில் கழிக்கப்படும். எஸ்.எம்.எஸ். பெறும் உங்கள் நண்பர், உங்களுக்குப் பதில் செய்தி அனுப்பினால், உங்கள் கணக்கில் மேலும் 5 அதிகரிக்கப்படும். 

இந்தியாவில் ஏர்டெல் மற்றும் பி.எஸ்.என்.எல். நிறுவனங்கள் கூகுள் நிறுவனத்துடன் ஒப்பந்தம் மேற்கொள்ளாததால், இவற்றின் மொபைல் எண்களுக்கு ஜிமெயில் மூலம் எஸ்.எம்.எஸ். அனுப்ப முடியாது. ஏர்செல், ஐடியா, லூப் மொபைல், எம்.டி.எஸ்., ரிலையன்ஸ், டாட்டா டொகோமோ, டாட்டா இண்டிகாம் மற்றும் வோடபோன் ஆகிய நிறுவனங்களிடம் பெற்றுள்ள மொபைல் எண்களுக்கு எஸ்.எம்.எஸ். அனுப்பலாம். 

இன்டர்நெட் வழி எஸ்.எம்.எஸ். செய்தியை இலவசமாக அனுப்பக் கூடிய வசதியை பல தளங்கள் தந்து கொண்டிருக்கின்றன. ஏற்கனவேsendsmsnow.com என்ற தளம் இவ்வகையில் முன்னணியில் இந்தியாவில் இயங்கி வருவது குறித்து, தகவல் வெளியிடப்பட்டது. 

இதே போல சில தளங்கள் குறிப்பிட்ட நாடுகளுக்கு மட்டும் இந்த சேவையை வழங்கி வருகின்றன. அமெரிக்காவிற்கு எஸ்.எம்.எஸ். அனுப்ப ண்ஞுணஞீண்ட்ண்ணணிதீ.ஞிணிட் என்ற தளத்தினைப் பயன்படுத்தலாம். இருப்பினும், மெயில் தளம் ஒன்று இந்த சேவையைத் தருவது கூகுள் மட்டுமே. இந்த ஜிமெயில் குறுஞ்செய்தி சேவையை எப்படிப் பயன்படுத்துவது எனப் பார்க்கலாம்.

1. முதலில் ஜிமெயில் தளத்தில் உங்கள் அக்கவுண்ட்டில் செல்லுங்கள். வலது பக்க மேல் மூலையில் “Settings” என்பதில் கிளிக் செய்திடவும்(படம்1). 

2. அதன் பின் “Labs” என்பதில் கிளிக் செய்திடவும்(படம்2). பின் “gmark” என்ற பிரிவிற்குச் சென்று, இதனை இயக்க “Enable” என்பதில் கிளிக் செய்திடவும்(படம்3). 

3. இறுதியாக இந்தப் பக்கத்தின் இறுதி வரை சென்று, இந்த மாற்றங்களை சேவ் செய்திடவும் (படம்4). அவ்வளவுதான்! இனி நீங்கள் ஜிமெயில் எஸ்.எம்.எஸ். செய்தி சேவையைப் பயன்படுத்தலாம். இதில் இன்னொரு இயக்கத்தினையும் இயங்குமாறு செய்துவிட்டால், எஸ்.எம்.எஸ். அனுப்புவது இன்னும் எளிதாகும். 

ஜிமெயில் லேப் பகுதியில் உள்ள “Send SMS” என்னும் பகுதிக்குச் சென்று, அதனை “Enable” செய்திடவும். இந்த வசதிக்குப் பெயர் “SMS in Chat Gadget”. இதனை இயக்கிவிட்டால், எஸ்.எம்.எஸ். அனுப்புவது  இன்னும் எளிதா

விண்டோஸ் 7 சர்வீஸ் பேக் இனி இல்லை


வழக்கமாக தன் விண்டோஸ் ஆப்பரேட்டிங் சிஸ்டத்திற்கு சர்வீஸ் பேக் என புதிய பைல்களை மைக்ரோசாப்ட் வெளியிடும். இவை புதிய வசதிகளைத் தருவதுடன், ஏற்கனவே இருக்கும் பிழைகளை நிவர்த்தி செய்திடும். 

ஆனால், விண்டோஸ் 7 சிஸ்டத்திற்கு இனி சர்வீஸ் பேக் வெளியிடப் போவதில்லை என மைக்ரோசாப்ட் அறிவித்துள்ளது. 

ஏற்கனவே விண்டோஸ் 7 சிஸ்டத்திற்கு சர்வீஸ் பேக் 1 வெளியிடப்பட்டது. இப்போது சர்வீஸ் பேக் 2 வெளியாக வேண்டிய நேரம் வந்த நிலையில், மைக்ரோசாப்ட் நிறுவனத்தில், இந்த சர்வீஸ் பேக் வடிவமக்கும் பணியில் உள்ள குழு இதனை அறிவித்துள்ளது.

விண்டோஸ் எக்ஸ்பி சிஸ்டத்திற்கு மூன்று சர்வீஸ் பேக் வெளியிடப்பட்டது. விஸ்டாவிற்கு இரண்டு பேக் கிடைத்தன. ஆனால் விண்டோஸ் 7 சிஸ்டத்திற்கு ஒன்றுடன் நிறுத்திக் கொள்ளப்படுகிறது. 

ஆப்பரேட்டிங் சிஸ்டம் ஒன்றுக்கு, சர்வீஸ் பேக் வெளியிடுவது, மைக்ரோசாப்ட் நிறுவனத்திற்கு அதிக நேரம் எடுத்துக் கொள்ளும் ஒரு சிக்கலான வேலையாகும். 

மேலும் விண்டோஸ் 8 வெளியாகிவிட்டதால், தன் வாடிக்கையாளர்கள் அதற்கு மாற வேண்டும் என மைக்ரோசாப்ட் எதிர்பார்க்கிறது. கூடுதல் வசதிகளைத் தரும் வகையில், விண்டோஸ் 7க்கு சர்வீஸ் பேக் வெளியிடப்பட்டால், விண்டோஸ் 8 சிஸ்டத்திற்கு மாறிட, வாடிக்கையாளர்கள் தயங்குவார்கள் என மைக்ரோசாப்ட் எண்ணுகிறது.

சர்வீஸ் பேக் ஒன்றில், நூற்றுக்கணக்கான தனிப்பட்ட வசதிகள் மேம்பாடு தரும் பைல்கள் மொத்தமாகக் கிடைக்கும். இவற்றை தனித்தனியே கொடுத்தால், நிறுவனத்திற்கும் வாடிக்கையாளருக்கும் சிஸ்டத்தை மேம்படுத்துவதில் பல பிரச்னைகள் எழும். எனவே தான் சர்வீஸ் பேக் முறையை, மைக்ரோசாப்ட் கொண்டு வந்தது. 

இரண்டாவது சர்வீஸ் பேக், விண்டோஸ் 7 சிஸ்டத்திற்கு இல்லை என அறிவித்தாலும், சின்ன சின்ன மேம்பாட்டிற்கான பைல்களை, விண்டோஸ் 7 மூடப்படும் வரை, மைக்ரோசாப்ட் வெளியிடலாம் என வாடிக்கையாளர்கள் எதிர்பார்க்கின்றனர். பார்க்கலாம்.